Thursday, June 29, 2017

தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவிற்கு கால நீட்டிப்பு வழங்கியது குறித்து TNGTF மாநில பொதுச்செயலாளர் அவர்களின் அறிக்கை

*அறிக்கை*
______________ ___________
*தமிழக அரசு அமைத்த ஊதியக்குழுவிற்கு மேலும் 3 மாதங்கள் காலநீட்டிப்பு..*
ஏற்கனவே அமைக்கப்பட்ட புதிய ஓய்வூதிய. திட்ட மறு ஆய்வு வல்லுனர் குழு ஓராண்டாக கால நீட்டிப்பிலே காலம் கடத்துகிறது.

ஓராண்டு முடிந்து 3 முறை கால நீட்டிப்பு செய்தும், ஆசிரியர்களின், அரசு ஊழியர்களின் எதிர்பார்புகளை புறந்தள்ளி ,இன்றுவரை அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை.
*மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே புதிய ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம் பெற்றுவருகிறார்கள், வரும் ஜுலை முதல் திருத்தப்பட்ட படிகளுடன் கூடுதல் ஊதியம் பெற உள்ளனர்.*
இந்நிலை யில் மாநில அரசு ஊதியக்குழு மேலும் 3 மாத கால நீட்டிப்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும்.
_அரசு உடனே 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்._ ஓய்வூதிய வல்லுனர் குழு அறிக்க்கையையும் விரைந்து வெளியிட வேண்டும்.
தமிழக அரசின் காலம் தாழ்த்தும் நடவடிக்கைக்கு ,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தனது அதிருப்தியை தெரிவிக்கிறது.
வரும் ஜீலை 9ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் நிர்வாக குழுவில் அடுத்த கட்ட போராடடநடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Dr.பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்
பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

No comments:

Post a Comment